வெசாக் வைபவத்தை முன்னிட்டு - மதுபானசாலைகள், இறைச்சி கடைகள் ,கஷினோ , களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு ..
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் , 30 ஆம் திகதி ஆகிய இரு தினங்களை அரச வெசாக் தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
2018 அரச வெசாக் வைபவத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளை உயிரிழக்க செய்யும் இடங்கள் கஷினோ சூதாட்ட நிலையங்கள் மற்றும் களியாட்ட இடங்கள் மூடப்படவுள்ளன.
வெசாக் வைபவத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் மே மாதம் 2 திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக ஏப்ரல் மாதம் 29 ஆம் 30 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளை மூடுவதற்கும் அங்காடி வர்த்தக நிலையங்கிலுள்ள மது விற்பனையை நிறுத்துவதற்கும் , இறைச்சிக்காக விலங்குகளை உயிரிழக்க செய்யும் இடங்கள் , குதிரை பந்தைய நிலையம், கஷினோ மண்டபம், களியாட்ட இடங்களை மூடுவதற்கும் , இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் , அங்காடி வர்த்தக நிலையங்களிலுள்ள இறைச்சி விற்பனையை நிறுத்தவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டதரணி சுதர்ஷன குணவர்தன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெசாக் வைபவத்தை முன்னிட்டு - மதுபானசாலைகள், இறைச்சி கடைகள் ,கஷினோ , களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு ..
Reviewed by Madawala News
on
April 26, 2018
Rating: