ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்றை அனைவரும் எதிர்பார்த்துள்ளதாக
பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும குறிப்பிட்டார்.
களுத்துரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
ஒவ்வொரு பிரிவினர் தங்களுக்கு விருப்பமான வர்களை தலைவராக்க முயற்சிக்கிறார்கள் . நாட்டிற்கு நன்மை செய்யக்கூடிய ஒருவரே கட்சிகளின் தலைவராகவும் நாட்டின் தலைவரகாவும் வரவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தில் மாற்றத்தை அனைவரும் விரும்புகிறார்கள்..
Reviewed by Madawala News
on
March 14, 2018
Rating: