2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையுமென, பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபயவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையுமெனவும் அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2020 ஜனாதிபதித் தேர்தலில் இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு.
Reviewed by Madawala News
on
March 13, 2018
Rating: