பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசனத்தை தக்கவைத்து கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
கோடிக்கணக்கிலான பணப்பொதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று (நேற்று) கூட கிங்ஸ் பேரி ஹோட்டலில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கோடிக் கணக்கிலான பணப்பொதியொன்றை பெற்றார். இவை அனைத்தும் மத்திய வங்கியில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணமாகும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தீவிரப்பொறுப்பு முகாமை சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மத்திய வங்கியில் மோசடி செய்து விட்டு தற்போது அவ்வாறான மோசடிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனே தீவிர பொறுப்பு முகாமை சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. தற்போது மத்திய வங்கி மோசடிக்கு காரணமான முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தற்போது சிங்கப்பூரில் பாதுகாப்பாக உள்ளார்.
சிங்கப்பூர் நாட்டுக்கு சர்வதேச பொலிஸினால் உள்நுழைய முடியாது. இந்நிலையில் பிடியாணை பிறப்பித்தும் எந்தவொரு பிரயோசனமும் கிடையாது. இந்நிலையில் அர்ஜூன மகேந்திரன் தற்போது சிங்கப்பூரில் பாதுகாப்பாக உள்ளார். அவரின் ஊடாக வந்ததே குறித்த சட்டமூலமாகும்.
மத்திய வங்கி மோசடி போன்றவைகளின் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி வாக்கு வங்கி 29 சதவீதம் வரை குறைந்தது. இந்த கட்சி இவ்வாறான வீழ்ச்சியை சந்தித்தது இல்லை. இதன்காரணமாகதான் தற்போது காலி, கட்டுநாயக்க, நீர்கொழும்பு ஆகிய மாநகர சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பொதுஜன முன்னணி யுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இது நம்பிக்கையில்லாப் பிரேர ணையின் எதிரொலியாகும். அதன்பிரகாரம் தற்போதே பிரதமர் ஆசனம் பறி போய் விட்டது.
அத்துடன் இன்று (நேற்று) காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாபீடத்தில் அங்கும் இங்கும் திரிந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். எனவே குறுகிய காலத்திற்காவது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அந்த வாய்ப்பினை நாம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். எனினும் எதிர்வரும் நான்காம் திகதிக்கு பின்னர் அவ்வாறான நிலைமை ஏற்படாது.
மேலும் பிரதமர் ஆசனத்தில் இருந்து எழுந்து அங்கும் இங்கும் திரிந்த வண்ணம் இருந்தார். தற்போது அந்த ஆசனம் தனக்குரியதல்ல என்பதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அந்த ஆசனத்தை தக்கவைப்பதற்கு பாராளுமன்ற உறுப் பினர்களுக்கு கோடிக்கணக்கிலான பணப்பொதி வழங்கும் காலம் வந்துள்ளது. இதன் பிரகாரம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டும் காலமாகும். இதன்படி இன்று (நேற்று) கூட கிங்ஸ் பேரி ஹோட்டலில் வைத்து
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கோடிக் கணக்கிலான பணப்பொதி யொன்றை பெற்றார். இவை அனைத்தும் மத்திய வங்கியில் இருந்து மோசடி செய் யப்பட்ட பணமாகும் என்றார்.
ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கிலான பணப்பொதி..
Reviewed by Madawala News
on
March 24, 2018
Rating: