சிலாபம் - மாதம்பை பகுதியில் நேற்றிரவு முஸ்லிம் நபர் மற்றும் வயோதிப சிங்கள நபர் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் , குறித்த சிங்கள நபர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
மாதம்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் (18) ஞாயிற்றுக்கிழமை இரவும், (19) திங்கட்கிழமை அதிகாலையும் ஒருவித பதற்றநிலை காணப்பட்டது அறிந்ததே.
பொலிஸாரும் இராணுவத்தினரும் இப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருந்த நிலையில் பாதிக்கபட்ட குறிப்பிட்ட நபர் காயம் குணமடைந்த நிலையில் சிலாபம் வைத்திய சாலையில் இருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றுவிட்டதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிப்பதுடன் பிரதேசம் சுமுக நிலைக்கு திரும்பி வருவதாகவும் அறிய முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அதேவேளை தாக்குதல் நடத்திய நபர் மது அருந்தியதாக வெளியாகும் செய்தியை ஊர்ஜிதப்படுத்த முடியாமல் உள்ளது எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாதம்பையில் ஏற்பட்ட சம்பவத்தின் அப்டேட்.
Reviewed by Madawala News
on
March 19, 2018
Rating: