முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியவர் தொலைபேசியால் சிக்கிய சம்பவம். #அக்குரணை, கசாவத்தை
அக்குரணை, கசாவத்தை, ஒவேஸ்ஸ பிரதேசத்திற்கு இன்று அதிகாலை 3 மணியளவில் பிரவேசித்த நபர்
ஒருவர் அங்கிருந்த ரெக்சின் கடை ஒன்றுக்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திவிட்டு, cctv கேமராவையும் உடைத்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் அங்க்கிருந்த மர ஆலை ஒன்றுக்கும் தீவைத்த போது அங்கிருந்தவர்களால் துரத்தப்பட்டு மொபைல் தொலைபேசியை கீழே போட்டுவிட்டு தப்பியோடி உள்ளார்.
உடனடியாக காலத்துக்கு வரவழைக்கப்பட்ட பூஜாபிட்டிய போலீசார் தொலைபேசிமூலம் குறிப்பிட்ட நபரை கைது செய்து CCTV வீடியோக்கள் மூலம் ஊர்ஜிதம் செய்து குறிப்பிட்ட நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
- சினான் அக்குறன -
முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியவர் தொலைபேசியால் சிக்கிய சம்பவம். #அக்குரணை, கசாவத்தை
Reviewed by Madawala News
on
March 11, 2018
Rating: