வழமைப்போல இன்றும் அமைச்சரவை கூட்டம் சூடு பிடித்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர் ஒருவர் சற்றுமுன்னர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
இன்றைய அமைச்சரவைக்கு சென்றுள்ள அமைச்சர்கள் ஹக்கீம் ரிஷாத் ஆகியோர் வழமைபோல மிக கடுமையாக ஜனாதிபதியிடம் திகன சம்பவம் தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் வருவதற்கு முன்னால் நல்லாட்சியை கொண்டுவர ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் முன்வந்தது,இதற்காகவாவது முஸ்லிம் சமூகத்திற்கு நன்றியுடயவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் ஒன்றும் பேசி வேளையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு முஸ்லிம் அரசியல் தலைவத்கள் கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இன்றும் அமைச்சரவை சூடாகியதாம் !
Reviewed by Madawala News
on
March 06, 2018
Rating: