1983 ல் தமிழ் மக்­களை அழித்­ததும் இன்று முஸ்லிம் மக்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம் !!



அர­சாங்கம் தனது இய­லா­மையை மூடி மறைக்கும் நோக்­கத்தில் இன­வாத முரண்­பா­டு­களை
தோற்­று­வித்து மக்­களை திசை­தி­ருப்­பு­கின்­றது. இந்த ஆட்­சியை கொண்­டு­வந்த முத­லீட்­டா­ளர்கள் மற்றும் மேற்கு நாடு­களின் சக்­தி­களே இன­வா­தத்தின் பின்­ன­ணியில் உள்­ளனர் என இலங்­கைக்­கான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்­கான  முன்னாள் வதி­விடப் பிர­தி­நிதி  தமரா குண­நா­யகம் தெரி­வித்தார். 

அன்று தமிழ் மக்­களை அழித்­ததும் இன்று முஸ்லிம் மக்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 
கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றில் அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். 
கடந்த தேர்­தலை  இந்த நாட்டு மக்கள் இன­வாத தேர்­த­லாக கரு­த­வில்லை. இந்த தேர்தல் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான தேர்­தலோ அல்­லது சிங்­கள முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான தேர்­தலோ அல்ல. இந்த நாட்டின் அர­சாங்கம்  மற்றும் அர­சாங்­கத்தின் கொள்­கைக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­துள்­ளனர். இந்த தேர்தல் சர்­வ­தேச ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான தேர்­த­லாகும். ஆகவே இதில் பெரும்­பான்மை மக்கள் அர­சாங்­கத்தை நிரி­யா­க­ரித்­துள்­ளனர். இந்த தேர்­தலில் அர­சாங்கம் பல­வீனம் அடைந்­துள்­ளது. அதில் இருந்து மக்­களின் சிந்­த­னை­களை திசை­தி­ருப்ப சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இன்று நாட்டில் இன­வாத முரண்­பா­டுகள் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றது. இதன் பின்­ன­ணியில் சர்­வ­தேச சதித்­திட்டம் இருக்­கின்­றதா என்ற சந்­தே­கமும் எழு­கின்­றது. இந்த நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் இந்த நாட்டில் முத­லீ­டு­களை செய்த நபர்கள் தமது முத­லீ­டு­களை தக்­க­வைத்துக் கொள்ள அதற்கு வாய்ப்­பான அர­சாங்­கத்தை தக்­க­வைத்­துக்­கொள்ள எடுக்கும் முயற்­சி­யாக இவை அமைந்­தி­ருக்க அதிக வாய்ப்­புகள் உள்­ளன. 
1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் இடம்­பெற்ற இன அழிப்பு மறந்­து­விட  முடி­யாது. அப்­போதும் அர­சாங்­கத்தின் அழுத்­தங்­களின் கார­ண­மாக அநி­யா­யங்கள் இடம்­பெற்­றன. அதன் விளை­வுகள் தான் யுத்தம் ஒன்­றுக்கு வழி­வ­குத்­தன. இப்­போதும் அதே நிலை­மைகள் தான் காணப்­ப­டு­கின்­றது. அப்­போதும் அர­சாங்கம் தனது நிலையை தக்­க­வைக்க முடி­யாது தடு­மா­றிக்­கொண்­டுதான் இருந்­தது.  எனினும் ஒரு மாற்றம் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ளது. அப்­போது தமி­ழர்­களை இலக்கு வைத்த அர­சாங்கம் இப்­போது முஸ்­லிம்­களை இலக்கு வைத்­துள்­ளது. ஆனால் இரண்டு கால­கட்­டத்­திலும் அர­சாங்கம் ஒன்­றுதான், அடக்­கு­முறை ஒன்­றுதான், ஜன­நா­யக மீறல்கள் ஒன்­றுதான். இன்று முஸ்லிம் மக்கள் மீதான கண்­மூடித் தன­மான அடக்­கு­முறை கையா­ளப்­பட்டு வரு­கின்­றது. மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். அர­சாங்­கத்தை மீறி செயற்­ப­டக்­கூ­டாது என்ற நோக்­கமும் உள்­ளது. 
இந்த மூன்று ஆண்­டு­களில் இலங்­கையின் பொரு­ளா­தாரம் பாரிய வீழ்ச்­சி­யினை கண்­டுள்­ளது, மக்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. உள்­நாட்டு உற்­பத்­திகள் வீழ்ச்சி கண்­டுள்­ளது. இப்­போ­துள்ள நிலையில் 25 வீத மக்­க­ளுக்கு ஆரோக்­கி­ய­மான உணவு கிடைக்­க­வில்லை என யுனெஸ்கோ தொண்டு நிறு­வ­னத்தின் அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லாட்சி அர­சாங்கம் மிகவும் கடு­மை­யான பாதை­யினை தெரிவு செய்­துள்­ளது. இவற்­றினால் மக்கள் அழுத்­தங்­களை சந்­திக்கும் நிலையில் அதனை திசை­தி­ருப்ப  இன்று இன­வாத கருத்­து­களை முன்­வைக்கும் சூழ்சி  நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் இன்று அர­சாங்கம் மிகவும் மோச­மான அர­சியல் நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றது. பிர­தான இரண்டு கட்­சி­களும், ஜனா­தி­பதி -பிர­தமர் ஆகி­யோரும் முரண்­பட்ட அர­சியல் நகர்­வுகள் தான் முன்­னெ­டுக்­க­பட்டு வருகின்றது.  இந்நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிகையிள்ளான பிரேரணை கொண்டுவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த நாட்டை சீரழிக்கும் அரசியல் அமைப்பு முறைமை ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.ஆகவே இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைமை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆகவே அவற்றினை தவிருக்கும் திட்டங்களே இந்த அடக்குமுறைகளாகும் .
-Virakesari-
1983 ல் தமிழ் மக்­களை அழித்­ததும் இன்று முஸ்லிம் மக்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம் !!  1983 ல்  தமிழ் மக்­களை அழித்­ததும் இன்று முஸ்லிம் மக்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம் !! Reviewed by Madawala News on March 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.