இனங்களுக்கிடையே சாதி,மத குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார் என்று பொதுபலசேனா செயலாளருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு முறையாக சமூகமளிக்காமையின் காரணமாகவே இந்த பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கொன்று தொடர்பிலேயே ஞானசார தேரோவை கைது செய்து ஆஜர் படுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் பொதுபலசேனா செயலாளரும் பங்கேற்றதாக கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அல்மசூறா / மடவலை நியூஸ்
ஞானசார தேரோவை கைது செய்ய உத்தரவு!
Reviewed by Euro Fashions
on
March 15, 2018
Rating: